பயிர் பாதுகாப்பு :: நெல் :: புதிய பி.டி. தொழில்நுட்பம்

இலைக்கருகல் நோயிடமிருந்து நெற்பயிரைப்பாதுகாக்க உயிரியல் மூலக்கூறு தொழில்நுட்பம்

அ.கோபிகிருஷ்ணன் மு.பாண்டியன் அ.சுகந்தி மற்றும் போ.க.சவிதா வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம், விரிஞ்சிபுரம்.
நெற்பயிரைத் தாக்கும் நோய்களில் இலைக்கருகல் நோய் நெல் உற்பத்திக்கு சவாலாக உள்ளது. இந்த நோய் தாக்கத்தால் 6% முதல் 70% வரை விளைச்சல் இழப்பு ஏற்படுகிறது. தென்மேற்கு பருவமழையின் போது இந்த நோயின் தாக்கம் இந்தியாவில் அதிகமாக இருக்கும்.

இலைக்கருகல் நோயின் காரணி அறிகுறி மற்றும் பரவும் விதம்

நெற்பயிரின் இலைக்கருகல் நோய் சேந்தோமோனாஸ் ஒரைசே பேத்தோவார் ஒரைசே என்றும் பாக்டீரியல் நுண்ணுயிரியால் ஏற்படுத்தப் படுகிறது. இந்த நுண்ணுயிரி இலையின் காயமடைந்த பகுதியின் வழியாக அல்லது இயற்கையாக உள்ள ஹைடத்தோடு எனப்படும் இலைத்துளையின் வழியாக உட்புகுந்து தாவரத்தில் நீர் எடுத்து செல்லும் திசுவான சைலம் திசு குழாயின் உட்பகுதியில் பல்கி பெருகி சேந்தேன் என்னும் வேதிப்பொருளை அதிகமாக உற்பத்தி செய்து நீர் எடுத்து செல்லும் குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது. நீர் பரவுவது தடைப்படுவதால் இலை நுனியிலிருந்து காய ஆரம்பித்து பின்பு இலை முழுவதும் பரவி காய்ந்து விடும். இலையானது சூரிய ஒளி மற்றும் இலை பச்சையத்தைப் பயன்படுத்தி உணவு உற்பத்தி செய்ய இயலாது. இதனால் விளைச்சல் வெகுவாகக் குறைகிறது. பாக்டீரியல் நுண்ணுயிரி அதிகமாக பல்கி பெருகியவுடன் இலைத்துளையின் வழியாக மஞ்சள் நிற நீர் திவலையாக வெளிவரும். இதனால் காற்று அல்லது மழைத்துளி மூலமாக இந்த நோய் கிருமி பாதிக்கப்பட்ட செடியிலிருந்து பாதிக்கப்படாத செடிக்குப் பரவுகிறது.

பாக்டீரியல் நுண்ணுயிரி நீர் எடுத்து செல்லும் திசுவான சைலம் குழாயின் உட்பகுதியில் பல்கி பெருகி அடைப்பை ஏற்படுத்துதல் பாக்டீரியல் நுண்ணுயிரி பல்கி பெருகியவுடன் இலைத்துளையின் வழியாக மஞ்சள் நிற நீர் திவலையாக வெளிவருதல் இலைக்கருகல் நோயால் பாதிக்கப்பட்ட நெற்பயிரின் நிலம்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014